LATEST NEWS
அடக்கடவுளே..! காலாவதியான ஊசி போட வந்த நர்ஸ்.. கடைசி நொடியில் நோயாளி செய்த காரியம்… மருத்துவமனை அலட்சியத்தை அம்பலப்படுத்திய வைரல் வீடியோ..!!
டேராடூனில் உள்ள கொரனேஷன் மருத்துவமனையில் நடந்த கடுமையான அலட்சியத்தை, நோயாளி ஒருவர் வெளியிட்ட வீடியோ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும் கௌரவ் குலாட்டி என்பவருக்கு, மருத்துவமனை ஊழியர்கள் ஊசி போட முற்பட்டுள்ளனர். அப்போது விழிப்புணர்வோடு செயல்பட்ட நோயாளி, அந்த மருந்து ஜூலை மாதத்திலேயே காலாவதியானது என்பதைக் கண்டறிந்து, ஊசி போட்டுக்கொள்ள மறுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், மருந்தகம் மற்றும் செவிலியர் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.
This video shared by a patient exposes a serious lapse at Dehradun’s Coronation Hospital.
Gaurav Gulati, recovering after hernia surgery, says hospital staff were about to administer an injection when he himself noticed that it had expired in July and refused to take it.
The… pic.twitter.com/lJ57Nea2Sc— Kumaon Jagran (@KumaonJagran) August 4, 2026
இந்தச் சம்பவத்தில் நோயாளி சுதாரிப்பாகச் செயல்பட்டுத் தன் உயிரைக் காத்துக் கொண்டார். ஆனால், மருத்துவமனைகளை முழுமையாக நம்பி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் எத்தனை பேர் ஊசி போடப்படும் முன் அதன் காலாவதித் தேதியைச் சரிபார்க்கிறார்கள் என்ற கேள்வியையும், இது சார்ந்த தீவிரமான கவலையையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
