LATEST NEWS
BREAKING: உதயநிதி ஸ்டாலின் ஜாமினில் விடுவிப்பு… 1:30 மணி நேர விசாரணைக்குப் பின் திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்..!!
தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி, திமுகவைச் சேர்ந்த உதயநிதியை இன்று காலை 10:30 மணி அளவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் காவல் நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வாணவேடிக்கை நிகழ்த்தியும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
