LATEST NEWS
“கைகள் இல்லைனா என்ன.. என் அன்பு குறையாது!” கால்களால் தம்பிக்கு ராக்கி கட்டி விட்டமாற்றுத்திறனாளி அக்கா… இணையத்தை கண்கலங்க வைத்த வீடியோ..!!
தன் கைகள் இல்லாத நிலையிலும், எவ்விதக் குறையுமின்றித் தனது கால்களாலேயே தம்பிக்குக் பாசத்தோடு ராக்கி கயிறு கட்டி, இனிப்புகளையும் ஊட்டி மகிழ்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணின் அசாத்தியத் துணிச்சலும் பாசப் போராட்டமும் ஒட்டுமொத்த இணையத்தையே உருக வைத்துள்ளது. அண்ணன்-தங்கை அல்லது அக்கா-தம்பிக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பு என்பது இந்த உலகிலேயே மிகவும் விலைமதிப்பற்ற மற்றும் புனிதமான பந்தம் என்பதை இப்பதிவு மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது. கைகள் இல்லாததால் தன் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களையும் முட்டுக்கட்டைகளையும் இந்த மகள் சந்தித்திருந்தாலும், ரக்ஷா பந்தன் திருநாளில் தம்பிக்கான பாசக் கடமையைச் செய்ய அவளது அசாத்தியத் துணிச்சல் அவளுக்குப் பெரும் உன்னத சக்தியைக் கொடுத்துள்ளது.
https://twitter.com/HajiNizamuddin3/status/2092394384046391373/photo/1
கால்களாலேயே ராக்கி கட்டி, தம்பியின் வாயில் இனிப்பு ஊட்டிய அந்த மாற்றுத்திறனாளி மகளைக் கண்டதும் பார்ப்பவர்களின் கண்கள் உண்மையாகவே கண்ணீரால் குளிர்ந்து நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளன. தன் அக்காவின் நிலையைப் புரிந்து கொண்டு அவளது காலடியில் அமர்ந்து, பாசத்தோடு கைகளைக் கூப்பி ராக்கி கட்டிக் கொண்ட தம்பியின் அன்பும் நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது. உடல் குறைகளைத் தாண்டித் தங்களது தூய்மையான அன்பால் உலகையே வியக்க வைத்துள்ள இந்த உடன்பிறப்புகளின் வைரல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி, லட்சக்கணக்கான நெட்டிசன்களைக் கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து வருகிறது.
