LATEST NEWS
இது என்னடா கூத்து..! வயிற்றில் கத்தி சொருகப்பட்ட நிலையிலும் நடுரோட்டில் ஆடை கழற்றி ஆடிய நபர்… போலீஸாரை அலறவிட்ட சைக்கோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
துருக்கியின் அக்ஸாராய் தஷ்பஜார் பகுதியில், இரு நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை நோக்கி ஆக்ரோஷமாக அலறி, நடுரோட்டிலேயே தனது ஆடைகளைக் கழற்றி எறிந்து பிரகலாபம் செய்த பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்திக் குத்துப்பட்டு இரத்தம் சிந்திய நிலையிலும் மருத்துவ உதவிகளை ஏற்க மறுத்துக் கலவரம் செய்த அந்த நபரை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் அதிரடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அக்ஸாராய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
KARNINDAN BIÇAKLA YARALANDI, POLİSLERE BAĞIRIP YOL ORTASINDA SOYUNDU
Aksaray Taşpazar Mahallesi’nde bir kişi, tartıştığı 2 şahıs tarafından karnından bıçaklandı. Olay yerine gelen polis ekiplerine bağırarak zorluk çıkaran ve yol ortasında soyunan yaralı, sağlık ekiplerince… pic.twitter.com/ieLXGPrO60— TV100 (@tv100) August 25, 2026
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களையே உ உறைய வைத்த இந்த நடுரோட்டு அநாகரிக அராஜகம் குறித்து அக்ஸாராய் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், நடுரோட்டில் கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ‘அந்த’ இரண்டு மர்ம நபர்களைக் கூண்டோடு வளைத்துப் பிடிப்பதற்காகப் போலீஸார் தற்போது பவர்ஃபுல் தேடுதல் வேட்டை ஆபரேஷனைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர்.
