ஐயோ வெளியவே வரமுடியாதா? தொடர் கனமழை..! சுடுகாட்டை மூழ்கடித்த வெள்ளம்… வெளியேறிய சடலங்களால் உறைந்துபோன மக்கள்.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ வெளியவே வரமுடியாதா? தொடர் கனமழை..! சுடுகாட்டை மூழ்கடித்த வெள்ளம்… வெளியேறிய சடலங்களால் உறைந்துபோன மக்கள்.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையில், அங்குள்ள சையத் மஜ்ரா கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுடுகாட்டிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மூன்று நாட்களாக இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அந்த மையவாடிப் பகுதியே முழுவதும் நீரில் மூழ்கியது.

இந்த வெள்ளப்பெருக்கால் சுடுகாட்டில் உள்ள பல கல்லறைகள் பலத்த சேதமடைந்தன. தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கரமான மண் அரிப்பின் காரணமாக, சில கல்லறைகள் இடிந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் வெளியே வரத் தொடங்கின. வெள்ள நீரில் பிணங்கள் மிதந்து செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர். கல்லறைகள் உடைந்து உடல்கள் மிதக்கும் இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் மக்களின் உதவியோடு மிதந்து சென்ற சடலங்களை மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டனர். பின்னர், சுடுகாட்டில் உள்ள சற்று மேடான மற்றும் பாதுகாப்பான பகுதியில், அந்த உடல்கள் மீண்டும் உரிய மதச் சடங்குகளுடன் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததே இதுபோன்ற மோசமான நிலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள், அரசு இதற்கு உடனடியாக ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in