“யாரோ கஞ்சா அடிக்கிறாங்க…” மைதானத்தில் வீசிய துர்நாற்றம்… கடுப்பாகி ஆட்டத்தை நிறுத்திய நம்பர் 1 வீராங்கனை..! வைரலாகும் சபலென்காவின் வைரல் கம்பேக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரோ கஞ்சா அடிக்கிறாங்க…” மைதானத்தில் வீசிய துர்நாற்றம்… கடுப்பாகி ஆட்டத்தை நிறுத்திய நம்பர் 1 வீராங்கனை..! வைரலாகும் சபலென்காவின் வைரல் கம்பேக்..!!

Published

on

2026 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றுப் போட்டியின் போது, உலகின் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, மைதானத்தில் கஞ்சா புகை வீசுவதாக நடுவரிடம் அளித்த புகாரால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் மைதானத்தில் கமில்லா ரகிமோவாவுக்கு எதிரான போட்டியின் போது, சபலென்கா இந்த காரமான துர்நாற்றத்தால் கவனம் சிதறினார். உடனடியாக சேர் அம்பயர் ஏவா அஸ்டராக்கி-மூரிடம் முறையிட்ட சபலென்கா, “யாரோ கஞ்சா புகைக்கிறார்கள்; நாற்றம் மிகவும் கடுமையாக இருப்பதால் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று நடுவரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தத் திடீர் இடையூறுக்குப் பிறகும், சபலென்கா விரைவில் தனது கவனத்தை ஆட்டத்தில் திருப் பினார். பெலாரஸ் வீராங்கனையான அவர், ரகிமோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பின்னர் இது குறித்து விளக்கிய சபலென்கா, இதற்கு முன்பும் அமெரிக்க ஓபன் போட்டிகளின் போது கஞ்சா வாசனை அடித்ததை உணர்ந்திருப்பதாகவும், ஆனால் இந்த ஆட்டத்தின் போது அது மிகக் கடுமையாக இருந்ததாகவும் கூறினார். பார்வையாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் மைதானத்தைச் சுற்றிப் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் அந்த வாடை ஆட்டக்காரர்களுக்குப் போட்டியிடுவதை சிரமமாக்குகிறது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement

பிளஷிங் மேடோஸ் மைதானத்தின் சூழல் பல நேரங்களில் வீரர்களுக்கு எதிர்பாராத கவனச்சிதறல்களை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த வழக்கத்திற்கு மாறான சம்பவம் இந்த ஆண்டின் அமெரிக்க ஓபன் போட்டியில் மற்றொரு மறக்க முடியாத தருணமாக மாறியது. இருப்பினும், சபலென்கா இந்த இடையூறையெல்லாம் கடந்து, தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பாதையில் உறுதியுடன் தொடர்கிறார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in