LATEST NEWS
“தமிழ்நாட்டில் 1.79 கோடி முட்டாள்கள் உள்ளனர்… இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவங்கதான்…” 34% வாக்காளர்களை விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தியின் சர்ச்சை பேட்டி..!!
தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 79 லட்சம் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும், அந்த 34 சதவீத முட்டாள்கள் வாக்களித்ததன் காரணமாகவே இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அரசுத் திட்டங்களின் பெயர்களை மாற்றி அமைத்தது மட்டுமே இவர்களுடைய இந்த 120 நாள் ஆட்சியின் சாதனை என்றும் அவர் தனது பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.
