LATEST NEWS
இறப்பதற்கு முன்பு மயில்சாமி எவ்வளவு பணம் வைத்திருந்தார் தெரியுமா?….. மனதை கலங்க வைக்கும் செய்தி….!!!!
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உடன்பால் திரைப்படம் வரை தனது நடிப்பால் நகைச்சுவையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டவர்.
தீவிர சிவபக்தனான இவர் சிவபெருமானின் திருநாளான சிவராத்திரி தினத்தில் உயிரிழந்தே சிவ பக்தன் ஆகிவிட்டார்.தன்னிடம் இருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்த மாமனிதர்.
வாரி வாரி வழங்குவதில் வல்லவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மயில்சாமி தன்னுடன் உதவி என கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார்.
அவரின் அந்த குணத்தை பலரும் இறுக்கமாக பேசியுள்ளனர். இந்நிலையில் மயில்சாமி இறப்பதற்கு முன்பு நடித்த திரைப்படத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கும், நான்காயிரம் ரூபாய் அசிஸ்டெண்ட்க்கும், ஆயிரம் ரூபாய் மகன்களுக்கும் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு அவரின் கையில் வெறும் 30 ரூபாய் மட்டுமே இருந்ததாக மயில்சாமியின் அசிஸ்டன்ட் கூறியுள்ள இந்த செய்தி பலரையும் உருக வைத்துள்ளது.
