தமிழ் சினிமாவில் 80’ஸ் தொடங்கி 90’ஸ் வரை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா.

பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.


1980 முதல் 90 காலகட்டத்தில் முன்னாடி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை நதியா. இவர் தனது நடிப்பு திறமையால் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காக வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னதம்பி பெரியதம்பி, தாமிரபரணி, மங்கை ஒரு கங்கை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் இயல்பான நடிப்பால் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அதுவும் இவர் நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்திற்கு பிறகு இவர் அணிந்த அனைத்து பொருட்களும் பிரபலமானது.

நதியா கம்மல், நதியா உடை, நதியா பொட்டு, நதியா கொலுசு என பிரபலமாக இருந்தார்.

இவர் புகழின் உச்சியில் இருந்த போதே தனது நீண்ட நாள் காவலரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வந்தார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…
