LATEST NEWS
22 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை மயூரி.. நினைவு கூர்ந்து நடிகை சங்கீதா சொன்ன தகவல்..!!
தமிழில் பாண்டியராஜனின் கும்பகோணம் கோபாலு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மயூரி. அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விசில், மன்மதன் மற்றும் கனா கண்டேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி பிசியான நடிகையாக வளம் வந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தன்னுடைய 22 வயதில் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே இவருடன் சேர்ந்து நடிகை சங்கீதா மலையாளத்தில் சமர் இன் பெத்லகேம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சங்கீதா அழைத்த பேட்டி ஒன்றில் மயூரி குறித்து பேசி உள்ளார். அதாவது திரைப்படத்தில் காண்பதும் நிஜ வாழ்க்கையில் இருப்பதும் வெவ்வேறானவை, வளைந்து கொடுப்பவர்களால் மட்டுமே இரண்டையும் கையாள முடியும் என்று கூறியுள்ளார்.
