LATEST NEWS
ஓடும் ரயிலில் வித்தியாசமான திருமணம்..? “என் அப்பா ஏற்க மாட்டார்” கதறிய காதலி… நெற்றியில் குங்குமத்தை வைத்த இளைஞன்… வைரலாகும் வீடியோ காட்சி…!!
சமூக வலைத்தளங்களில் தற்போது ஓடும் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது காதலியின் நெற்றியில் திடீரென குங்குமம் வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அப்போது அந்த இளம்பெண் சற்று உணர்ச்சிவசப்பட்டு, “என் அப்பா இதற்கு சம்மதிக்க மாட்டார்” என்று கூறுவது கேட்கிறது. இந்த சம்பவம் எந்த ரயிலில் நடந்தது, அந்த காதல் ஜோடி யார் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும், ஓடும் ரயிலில் பொது இடத்தில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் காதலுக்காக துணிந்து முடிவெடுத்த இந்த ஜோடியை பாராட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால், வேறு சிலரோ பெற்றோரின் சம்மதம் இல்லாமல், அதுவும் பொது இடத்தில் இப்படி அவசரமாக ஒரு பெரிய முடிவை எடுப்பது முற்றிலும் தவறு என்று விமர்சித்து வருகின்றனர். பெற்றோரின் சம்மதமின்றி நடக்கும் திருமணங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்றும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தனிப்பட்ட காதலுக்கு முக்கியத்துவம் அளிப்பதா அல்லது குடும்பத்தின் சம்மதத்திற்கு மதிப்பளிப்பதா என்ற விவாதம் இணையத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
