CRIME
“உங்களது அடியை என்னால் இனி தாங்க முடியாது..!” காலில் இறுதி வார்த்தைகளை எழுதி வைத்து மனைவி விபரீத முடிவு.. குஜராத்தில் அரங்கேறிய கோரச் சம்பவம்..!!
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள உந்தேரா டவுன்ஷிப்பில் வசித்து வந்த ஹத்ராஸைச் சேர்ந்த சீமா என்ற பெண், கணவரின் தொடர் உடல் மற்றும் மனத் துன்புறுத்தல்களால் மனவேதனை அடைந்து தனது 8 மாதக் குழந்தையை அருகிலுள்ள அயலாரிடம் விட்டுவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் புதன்கிழமை தான் வெளிச்சத்திற்கு வந்ததுடன், இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் சாயாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சீமா தனது இடது காலில், “நான் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன். இனிமேல் உங்கள் குடும்பத்தை நீங்களே பார்த்துக்கொண்டு அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களது அடித்துத் துன்புறுத்துவதை என்னால் இனி தாங்க முடியாது” என்று உருக்கமாகவும் வேதனையுடனும் எழுதி வைத்திருந்தது அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது; ரிலையன்ஸ் நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணியாற்றும் சுதிர் குமாருக்கும் சீமாவுக்கும் கடந்த 2023 ஜூன் 22-ல் திருமணம் நடைபெற்ற நிலையில், கணவனின் கொடூரத் தாக்குதல்களால் ஒரு இளம் தாய் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள இந்தச் சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.
