LATEST NEWS
“ஐய்யோ இப்படி ஒரு பாசமா…” இறந்துபோன செல்லக் குதிரையின் கழுத்தைக் கட்டிப்பிடிச்சு கதறிய நபர்… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும் போது ஏற்படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், மனிதர்களுக்கு இணையான அன்பை விலங்குகளிடமும் கொள்ள முடியும் என்பதற்குச் சான்றாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒரு குடும்பத்தினர் தங்களது செல்லக் குதிரைக்குக் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய இந்த உணர்ச்சிப்பூர்வமானக் காட்சி, இதயம் உள்ள அனைவரையும் உருக வைத்து லட்சக்கணக்கானோரின் கண்களில் நீரை வரவழைத்துள்ளது.
‘Woke Eminent’ என்ற எக்ஸ் பயனர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டின் முற்றத்தில் திரண்டு நிற்பதைக் காண முடிகிறது. வழக்கமாக மகிழ்ச்சியும் சிரிப்பும் பொங்கும் அந்த வீட்டின் முற்றத்தில், அன்று துக்கமும் அன்புக்குரிய ஜீவனைப் பிரிந்த சோகமும் அமைதியும் மட்டுமே நிறைந்திருந்தது. அக்குடும்பத்தினருக்கு அக்குதிரை ஒரு சாதாரண விலங்காக இல்லாமல், குடும்பத்தில் ஒரு பிரிக்க முடியாத உறுப்பினராகவே வாழ்ந்திருக்கிறது என்பதை அங்கே நிலவிய சோகமான சூழல் உணர்த்துகிறது.
வீடியோவின் மிகவும் நெகிழ்ச்சியான பகுதியில், அக்குதிரை பாரம்பரியக் கயிற்றுக் கட்டிலில் உயிரற்ற நிலையில் கிடத்தப்பட்டிருந்தது. அதன் உடல் முழுவதும் பூமாலைகள் அணிவிக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் சாமந்திப் பூக்கள் தூவப்பட்டிருந்தன. அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் குதிரையின் தலையிலும் கழுத்திலும் தன் தலையை வைத்து அழுதுகொண்டே அதை இறுதிமுறையாகக் கட்டிப்பிடித்து விடைபெற்றார். அருகிலிருந்த பெண்களாலும் தங்களின் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள், “மனிதன் விலங்கின் மீது காட்டும் உண்மையான அன்பிற்கு இதுவே சான்று” எனக் கூறி அச்செல்வத்தின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து வருகின்றனர்.
