LATEST NEWS
‘நெஞ்சிருக்கும் வரை’ பட நடிகை இப்போ எப்படி இருகாங்க? என்ன பன்றாங்க தெரியுமா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…
இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நெஞ்சிருக்கும் வரை’. இப்படத்தில் நரேன்,பூனம் கவுர் ,மகாதேவன்,தலைவாசல் விஜய்,கலைராணி ,சஞ்சீவ் ,நாசர்,லிவிங்ஸ்டன் ,சிறீமன்,சுப்பாராஜ,சார்லி,ஆர்த்தி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை பூனம் கவுர். இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.தந்தை பீப் சிங் தாய் கரைன் கவுர்.
இவருக்கு ஷியாம் சிங் என்ற ஒரு சகோதரரும் உள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள Public School பள்ளி படிப்பை முடித்தார்.டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT) பேஷன் டிசைனிங் பட்டம் பெற்றார்.
இவர் மாயாஜாலம் என்கின்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தமிழில் பயணம், விஷாலின் வெடி, 6, என் வழி தனி வழி, அச்சாரம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மட்டுமல்ல மாடலிங் கூட.நடிகை பூனம் கவுர் திரைப்படங்களில் சமீபமாக பார்க்க முடிவதில்லை,கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறார். இவர் கடைசியாக கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
