“எது நடந்தாலும் அம்மா நான் இருக்கேன்”… கைக்குழந்தையுடன் உருக்கமான பதிவு போட்ட நடிகை திவ்யா ஸ்ரீதர்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“எது நடந்தாலும் அம்மா நான் இருக்கேன்”… கைக்குழந்தையுடன் உருக்கமான பதிவு போட்ட நடிகை திவ்யா ஸ்ரீதர்…!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவை இரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரங்களில் அர்ணவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த பிரச்சனை போலீஸ் விசாரணை வரை சென்றது.

Advertisement

இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது வரை பிறந்த குழந்தையை அர்னாவ் நேரில் சென்று பார்க்கவில்லை. இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் ஷூட்டிங் செல்லும்போது கைக்குழந்தையுடன் சென்று வருகிறார்.

ஆதரவுக்கு யாரும் இல்லை என்பதால் அவரே சூட்டிங் கூட்டிச் சென்று தன்னுடைய மகளை பார்த்துக் கொள்கிறார். தற்போது அவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு எது நடந்தாலும் மகளுக்காக அம்மா நான் இருப்பேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். கணவனே தற்போது எதிரியாக மாறி பல குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில் திவ்யா இப்படி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

Advertisement

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CtQjtRNApGP/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Advertisement
Continue Reading
Advertisement