குடி போதையில் டிரைவர்… “டமாலுனு சவுண்டு”…! விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

குடி போதையில் டிரைவர்… “டமாலுனு சவுண்டு”…! விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி..?

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில்  ஒருவர் தான் பாடகி சின்மயி. இவர் ஏ.ஆர்  ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலை பாடி தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியை தொகுத்து வழங்கினார். அதைத் தொடர்ந்து வசீகரா, தித்திக்குதே, பாய்ஸ், உனக்கு 20 எனக்கு 18, கிரி, பூ ,ஆதவன், எந்திரன், ஐ போன்ற படங்களில்  பாடியுள்ளார்.

சில்லுனு ஒரு காதல், உன்னாலே உன்னாலே ,வாரணம் ஆயிரம் ,அசல், சுறா, கோ போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பாடகி சின்மயி சமூகப் பிரச்சனைகளுக்கு அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பிரபல பாடகி சின்மயி அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிறு மாலை விபத்தில் சிக்கியதாக X  தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

குழந்தைகளுடன் பாடகி சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் வந்து மோதிவிட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ தப்பித்தும் சென்றிருக்கிறது. நாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். “குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்று சின்மயி இந்த ட்விட்டர் பதிவில் எழுதியிருக்கிறார்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement