LATEST NEWS
பலமுறை கரு ச்சி தைவு..! அடுத்தடுத்து கலைந்த கர்ப்பம்..! ஆனாலும் 45 வயதில் குழந்தை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..!! எப்படி தெரியுமா..?
நடிகை ஷில்பா செட்டி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் மேக்கோரீனா என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
45 வயதாகும் நடிகை ஷில்பா ஷெட்டி எப்பொழுதும் தன்னுடைய சமூக வலைதளத்தில் தன்னுடைய ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ் பற்றிய பல வீடியோக்களை பதிவிட்டு வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வியான் குந்த்ரா என்று பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஷமிஷா ஷெட்டி என்று பெயரிட்டுள்ளனர்.
ஷ என்ற எழுத்து சமஸ்கிருதத்தில் எல்லாம் இருப்பவள் என்று பொருள். மிஷா என்றால் மகாலட்சுமி என்று பொருள் தரும். ஆகையால் இரண்டையும் இணைத்து நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடைய மகளுக்கு ஷமிஷா ஷெட்டி என்று பெயரிட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இந்த குழந்தையை நடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் தனக்கு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டார் என்ற தகவலை முதன்முறையாக வெளி உலகிற்கு தெரியப் படுத்தி இருக்கிறார்.
தன் மகனுக்கு எப்பொழுதும் ஒரு உடன்பிறப்பு தேவை என்பதில் நடிகை ஷில்பா ஷெட்டி கவனத்துடன் இருந்திருக்கிறார். உடன் பிறப்பின் முக்கியத்துவத்தை சரியாக அறிந்து கொண்ட அவர் இரண்டாவது முறையாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்து இரண்டு முறை கரு த்தரி த்து இருக்கிறார். ஆனால் அவரது உடலில் ஏற்பட்ட ஏபிஎல்ஏ என்ற ஆட்டோ நோ யெ திர்ப்பு நோ யால் இரண்டு முறையும் அவருக்கு க ருச்சி தைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு குழந்தை பிறப்பது சற்று க டின மான சூழ்நிலை ஆக மாறியது.
இதனைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி பலமுறை இரண்டாவதாக வேறு ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால் அந்த யோசனையும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற் றுக்கொ ள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று முயற்சிகளின் பலனாக நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது அழகிய பெண் குழந்தைக்கு இரண்டாவது முறையாக தாயாகி உள்ளார். இதனை அவரே பேட்டி ஒன்றில் பங்கேற்ற பொழுது மனம் திறந்து கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
