LATEST NEWS
பிரபல சீரியல் கதாநாயகி ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள் !
தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரச்சிதா மகாலட்சுமி ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. அவர் மெகா மந்தாரா கன்னட சீரியலிலும் மலையாள சீரியலிலும் தொலைக்காட்சியில் அறிமுகமானார். சரவணன் மீனாட்சி சீசன் 2 இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், சரவணன் மீனாட்சி சீசன் 3 மற்றும் ஸ்டார் விஜய் படத்தில் கீதாஞ்சலி ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஏனென்றால் எல்லார் வீடு குடும்பதரசிகளுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான். அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு சற்று இடைவெளி விட்டிருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடித்து வருகிறார். சமீப காலமாக, இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்து வருகிறார்.
கவர்ச்சி உடைகளை அணிவதை பெரும்பாலும் விரும்பாத இவர் புடவை சகிதமகாவே காட்சியளிக்கிறார். புடவை அணிந்தாலும் கவர்ச்சியாகவும், தன்னுடைய உடல் வாகு தெரிவது போன்றும் அணிவதால் ரசிகர்களின் கண்களை சுண்டி இழுக்கின்றன அவர் வெளியிடும் புகைப்படங்கள்.
அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.
