LATEST NEWS
வடிவேலுவின் ஜோடி நடிகை திடீர் தற்கொலை… உண்மை காரணத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்… அதிர்ச்சி..!!
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் நிறைய திரைப்படங்களில் காமெடியில் அசத்தியவர் கோவை சரளா. அவருக்கு அடுத்தபடியாக வடிவேலுவுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் காமெடியில் நடித்தவர் தான் ஷோபனா.ஆரம்பத்தில் சின்ன திரையில் நடித்து வந்த இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய முக பாவனை மூலமாக காமெடியில் அசத்தினார்.
அதேசமயம் வடிவேலுவுடன் இவர் பண்ணும் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்படி சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக ஷோபனா நடித்திருந்த நிலையில் அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த இவ்வாறு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் தற்கொலைக்கான காரணம் உடல் ரீதியான பிரச்சனை என கூறப்பட்டது. ஆனால் இவரின் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது சோபனா சின்னத்திரையில் நடிக்கும் போது அவருடன் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார்.
இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இயக்குனர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே காதல் தோல்வி காரணமாக தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
