LATEST NEWS
கேஸ் சிலிண்டர் காணவில்லையா?பதற வேண்டாம்… புதிய சிலிண்டர் பெற இதை மட்டும் செய்யுங்க..!!
வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர் எதிர்பாராத விதமாக திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, நமது கேஸ் இணைப்பு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று பலரும் அச்சப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி எந்த ஆபத்தும் இல்லை. இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது, சிறிதும் பதற்றமடையாமல் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி, சிலிண்டரில் உள்ள பிரத்யேக எண்ணை குறிப்பிட்டு ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அதன் பிறகு, இந்த திருட்டு அல்லது இழப்பு குறித்த முழு தகவலையும் உங்கள் கேஸ் விநியோகஸ்தருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, அந்த எஃப்.ஐ.ஆர் நகல், உங்களின் அசல் சந்தா ரசீது மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உங்களின் அடையாளச் சான்று ஆகியவற்றை கேஸ் ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ஆவணங்களை முழுமையாகச் சரிபார்த்த பிறகு, சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் இழப்பிற்கு ஏற்ப தோராயமாக 1000 முதல் 3000 ரூபாய் வரை அபராதம் அல்லது புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையை ஏஜென்சி வசூலிப்பார்கள். இந்த எளிய நடைமுறைகளைச் சரியாக முடித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டால், உங்களுக்குப் புதிய கேஸ் சிலிண்டரும் ரெகுலேட்டரும் எந்த சிக்கலும் இன்றி உடனடியாக கிடைத்துவிடும்.
