LATEST NEWS
திருமண கோலத்தில் போட்டோ சூட் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா! குழந்தை பிறந்த பின்னரா இப்படி? ஷாக்கான ரசிகர்கள்
விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மனசா. சஞ்சீவ் – ஆலியா கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்த இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்நிலையில் தற்போது பழைய வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஆல்யா எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக இருப்பவர். மகளுக்கு ‘ஐலா சையத்’ என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது திருமண கோலத்தில் போட்டோ சூட் செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
