LATEST NEWS
எடப்பாடிக்கு அடுத்த பிக்பாஸ் அதிர்ச்சி… தவெக-வில் இணையத் தயாராகும் மேலும் 6 அதிமுக விஐபிக்கள்… சரிவின் விளிம்பில் இபிஎஸ் கோட்டை..!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மரகதம் குமரவேல், சத்யபாமா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது கே.சி. வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் எஸ்.எம். சுகுமார் ஆகிய மேலும் 6 முக்கிய அதிமுக புள்ளிகள் தவெகவில் இணையத் தயாராகி வருவதாகப் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே தொகுதிக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்ற யதார்த்தத்தை உணர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் இந்த முடிவை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், வரும் இடைத்தேர்தல்களில் எப்படியாவது சட்டப்பேரவையில் தனி மெஜாரிட்டியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக உறுதியாக இருக்கிறார். இதற்காக அதிமுகவின் கோட்டைகளைக் கைப்பற்றி அங்குள்ள முக்கியத் தலைவர்களைத் தனது கட்சிக்குள் இழுக்கும் வேலைகளைத் தவெக முடுக்கிவிட்டுள்ளது. இந்த 6 எம்.எல்.ஏக்களின் அடுத்தகட்ட நகர்வு சாத்தியமானால், சட்டப்பேரவையில் யாருடைய கூட்டணியையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற வலுவான நிலையை முதலமைச்சர் விஜய் எட்டிவிடுவார் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு இது மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
