LATEST NEWS
மகளிருக்கு ஹாப்பி நியூஸ்.. வங்கிக் கணக்கில் ரூ.2,500.. எப்போது வரவு வைக்கப்படும் தெரியுமா..? அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!
நிதி ஆதாரங்களைச் சீரமைத்த பிறகு மகளிர்க்கான ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
தற்போது மாநிலத்தில் அதிகப்படியான கடன் சுமை நிலவுவதால், ஒரே நேரத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் உடனடியாகச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அவர் விளக்கினார். இருப்பினும், மக்கள் மீது கொண்ட அக்கறையால் முதலமைச்சர் விஜய் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
