LATEST NEWS
“தயவுசெஞ்சு எல்லாரும் பிரே பண்ணுங்க..” மீண்டும் தொடங்கும் பேராபத்து… கண்ணீருடன் கதறிய பெண்.. நேபாளத்தில் இருந்து வந்த திகிலூட்டும் வீடியோ..!!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்தத் துயரமான சூழ்நிலையில், பெண் ஒருவர் அங்கிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் உலகெங்கிலும் உள்ள மக்களிடம் உருக்கமாகப் பேசி, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தங்களைக் காக்க நேபாளத்திற்காக அனைவரும் மனமுருகிப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Nepal की स्थिति अभी भी लगता है सामान्य नहीं हुआ है परसो के त्रासदी के बाद भी
ये महिला वीडियो बना के लोगो से अपील कर रही है आप सब नेपाल के लिए प्रार्थना करे
और महिला ये भी कह रही की उसके पीछे ध्यान से सुनो ये आवाज आ रही है कैसी
मुझे लगता है कही फिर कोई ग्लेशियर तो नहीं टूट… pic.twitter.com/BiDxTeO007— Ajit Yadav (@AjitYadav260) August 29, 2026
மேலும், அந்தப் பெண் பேசும்போது அவருக்குப் பின்னால் கேட்கும் பயங்கரமான சத்தத்தைக் கவனிக்குமாறு கூறுகிறார். அந்த அதிர்வு மற்றும் சத்தத்தின் தீவிரத்தைப் பார்க்கும்போது, அந்த மலைப்பகுதியில் மற்றொரு பனிப்பாறை உடைந்து சரிந்து கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் அந்த ஒலியை உற்றுக் கவனித்து, அது பனிப்பாறை உடையும் சத்தமா அல்லது புதியதொரு நிலச்சரிவின் பேராபத்தா என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அவர் விவரித்துள்ளார்
