LATEST NEWS
“இப்பதான் ட்ரெக்கிங் முடிந்தது..!” குடும்பத்திற்கு வாட்ஸ்அப் செய்த சில நிமிடங்களில் மாயமான 50 வயது பெண்.. நெஞ்சை உலுக்கும் நேபாள வெள்ளம்..!!
கனடாவைச் சேர்ந்த 50 வயதான இந்திய வம்சாவளி பெண்மணி சுவாதி பக்ரேச்சா, கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பும்போது நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் காணாமல் போயுள்ளார். பேரழிவை ஏற்படுத்திய இந்த திடீர் வெள்ளம் தாக்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான், அவர் தனது குடும்பத்தினருக்குத் தான் யாத்திரையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக உருக்கமான ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். “இப்பதான் ட்ரெக்கிங் முடிந்தது” என்று அவர் அனுப்பிய அந்த கடைசி செய்தி, தற்போது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/AvmNews7/status/2093714360707530951/video/1
நேபாள எல்லையோரப் பகுதியில் நிலச்சரிவும் வெள்ளமும் சூழ்ந்துள்ளதால், சுவாதி பக்ரேச்சாவைக் கண்டறியும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று தற்பொழுது கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கைலாஷ் யாத்திரையின் மகிழ்ச்சியான தருணம், இயற்கை சீற்றத்தால் இப்படி ஒரு இக்கட்டான சூழலாக மாறியிருப்பது அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது.
