LATEST NEWS
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.20,000 வட்டி இல்லா முன்பணம், நவம்பர் முதல் புதிய சீருடை – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் புதிய சீருடை திட்டத்தையும், ஆண்டுக்கு ரூ. 20,000 வட்டி இல்லாத பண்டிகை முன்பண திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கடை மேற்பார்வையாளர்களுக்கு இளநீல நிற சட்டையும் கடற்படை நீல நிற பேன்ட்டும், விற்பனையாளர்களுக்கு பீஜ் நிற சட்டையும் அடர் சாம்பல் நிற பேன்ட்டும் சீருடையாக நிர்ணயிக்கப்பட்டு, இதற்காக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 6,000 செலுத்தப்படவுள்ளது. இப்புதிய சீருடை விதிமுறைகள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
மேலும், ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற ஏதேனும் ஒரு பண்டிகைக்கு ரூ. 20,000 முன்பணம் வழங்கப்படவுள்ளதுடன், இது வட்டியின்றி மாதந்தோறும் ரூ. 2,000 வீதம் 10 தவணைகளாகச் சம்பளத்தில் பிடிக்கப்படும். இவற்றுடன் சேர்த்து, கடைகளின் உண்மையான தேவையின் அடிப்படையில் மட்டுமே இனி மதுபானங்களை விநியோகிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையையும் செப்டம்பர் 21 முதல் டாஸ்மாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
