LATEST NEWS
ஐய்யோ..! என் மனைவியே என்னுடைய… DNA ரிப்போர்ட்டைப் பார்த்து அலறிய கணவர்..! 2 குழந்தைகளை பெற்ற பிறகு தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!
சமூக ஊடகங்களில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வேகமாக வைரலாகி வருகிறது. டிக்டாக்கில் வீடியோக்களைப் பகிரும் ஒரு நபர், தனது குடும்பத்தின் மரபியல் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்காகத் தனது மனைவியுடன் சேர்ந்து DNA பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவுகள் வந்தபோது, தான் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ள பெண், உண்மையில் தனது சொந்த அத்தை மகள் என்ற அதிர்ச்சி தரும் உண்மை வெளிவந்தது. திருமணத்திற்கு முன்பாக இருவருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை.
விசாரணையில், இவருடைய பாட்டியும், இவரது மனைவியின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள் என்பதும், காலப்போக்கில் இரு குடும்பங்களுக்கும் இடையேயான தொடர்பு அறுந்ததால் இந்த உறவு யாருக்கும் தெரியாமல் போனதும் தெரியவந்தது. இந்த உண்மையை அறிந்த கணவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, “நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டுமா? எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கிய உறவினர்களிடையே நடைபெறும் திருமணங்களால் குழந்தைகளுக்குத் தாலசீமியா, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற மரபணு நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளும், தம்பதியருக்கு ஆலோசனையும் தேவை என ஒருதரப்பினர் அறிவுறுத்துகின்றனர். அதேவேளையில், ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் பீதியடையத் தேவையில்லை என மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். எனினும், இதுபோன்ற சூழ்நிலையில் பதற்றமடையாமல் மருத்துவர் மற்றும் மரபியல் ஆலோசகரின் உதவியைப் பெறுவதே சரியானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
