LATEST NEWS
ஐயோ நெஞ்சம் பதறுதே..! சிறுத்தையோடு சண்டையிட்ட தாய் பசு கன்றுக்குட்டியைக் காப்பாற்ற நடந்த நெஞ்சை உருக்கும் போராட்டம்.. சோஷியல் மீடியாவை உலுக்கும் 30 வினாடி சிசிடிவி காட்சி.!!
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தேவதார் பெட்ரோல் பங்க் அருகே, நள்ளிரவில் புகுந்த சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியைத் தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை திடீரெனப் பாய்ந்து தாக்கியபோது, கன்றின் தாய் பசு அதனைப் போராடி காப்பாற்ற முயன்றபோதிலும், சிறுத்தையின் அதிவேகத் தாக்குதலால் கன்றுக்குட்டியைக் காப்பாற்ற முடியாமல் போனது நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைந்தது.
जानवरों को पहले ही बाघ की मौजूदगी का आभास हो गया था, इसलिए वे सतर्क हो गए थे। लेकिन बाघ ने इतनी तेज़ी और फुर्ती से हमला किया कि बछड़े को बचने का मौका नहीं मिल सका। पास खड़ी एक गाय ने पूरी कोशिश की कि बछड़ा बाघ के चंगुल से निकल जाए, लेकिन बाघ ने अपनी पकड़ ढीली नहीं की। कुछ देर तक… pic.twitter.com/5AZoHNChmu— Arbind pandey avinash (@Arbindp1) August 6, 2026
எக்ஸ் தளத்தில் வைரலாகும் இக்காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே வனவிலங்குகளின் ஊடுருவலும் மனித-வனவிலங்கு மோதல்களும் அதிகரித்து வருவது குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்றாலும், அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் இரவுநேரக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
