LATEST NEWS
“எனக்கு அவரு வேண்டாம்… இவ தான் வேணும்..!” பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு 25 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த தாய்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணொருவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையிலும், தன் கணவர் மற்றும் பிறந்த வீட்டாருடன் வாழ்வதற்குப் பதிலாக கடந்த ஒரு வருடமாக தனக்கு அறிமுகமான ஒரு இளம்பெண்ணுடன் வாழ முடிவு செய்துள்ளார். செப்டம்பர் 6-ஆம் தேதி தாய் வீட்டிலிருந்து திடீரென மாயமான அந்தப் பெண்ணைப் உறவினர்கள் தேடிவந்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கான்பூரின் பங்கீ பகுதியில் டெல்லியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருடன் அவர் தங்கியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, தானும் அந்த இளம்பெண்ணும் கடந்த ஒரு வருடமாக நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், அவருடனேயே வாழ விரும்புவதாகவும் அப்பெண் கூறினார். மேலும், தான் ஒரு வயது வந்த நபர் என்பதால் தன் வாழ்க்கை குறித்த முடிவை எடுக்கும் உரிமை தனக்கு உள்ளது என்று தெரிவித்த அவர், தன் கணவரிடமோ அல்லது பெற்றோர் வீட்டிற்கோ திரும்ப முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். காவல்துறையினர் அவரைச் செயல்நிலை நீதிபதி (Executive Magistrate) முன்பாகவும் ஆஜர்படுத்தினர்; அங்கும் அவர் எந்தவிதக் குழப்பமும் இன்றி தனது முடிவை மிகத் தெளிவாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது எந்தவித கட்டாயமோ அல்லது அழுத்தமோ இல்லை என்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர். பெண்ணின் விருப்பத்திற்கேற்ப, இருவரையும் காவல் நிலையத்திலிருந்து செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், இரு பெண்களும் பேருந்து மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். வயது வந்த பெண்ணின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால், அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
