DEVOTIONAL
“அடப்பாவி.. கள்ளகாதலியுடன் ‘அந்த’ கோலத்தில் பார்த்த மனைவி.. ஆத்திரத்தில் கட்டாயப்படுத்தி கணவன் செய்த கொடூர காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், ஹர்தாலிகா தீஜ் பண்டிகை நள்ளிரவில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாகக் கணவனே தன் மனைவிக்குக் கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்ஜி கிராமத்தைச் சேர்ந்த ஜோதி சாஹு என்ற பெண், தனது கணவர் உமேஷ் சாஹு மீது இந்த அதிர்ச்சிப் புகாரை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, கணவருக்கு அவரது பெண் உறவினர் ஒருவருடன் தவறான கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பாகத் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், தீஜ் பண்டிகை அன்று நள்ளிரவில் தனது கணவர் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை ஜோதி நேரில் பார்த்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் வெடித்த நிலையில், ஆத்திரமடைந்த கணவர் உமேஷ் சாஹு, மனைவியைக் கட்டாயப்படுத்தி விஷத்தைக் குடிக்க வைத்துள்ளார். ஜோதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை மீட்டு ரீதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரது நிலைமை அதீத கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகக் கட்னி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரீதி போலீஸார், டிஎஸ்பி ரத்னேஷ் மிஸ்ரா தலைமையில் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
