DEVOTIONAL
அட்ராசக்க..! ஆடி பௌர்ணமியில் அடிக்கும் மாபெரும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.. உங்க ராசி இதுல இருக்கா…?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், ஆடி பௌர்ணமி நாளில், அழகு மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், தைரியம் மற்றும் வீரத்தின் காரணியான செவ்வாயும் ஒன்றுக்கொன்று 4-ஆம் மற்றும் 10-ஆம் வீடுகளில் அமைந்து சக்திவாய்ந்த ‘கேந்திர திருஷ்டி யோகத்தை’ உருவாக்குகின்றன. இந்த அரிய யோகத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரவுள்ளன.
மேஷ ராசி
மிகவும் சாதகமான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பண நிலுவைகள் கைக்கு வந்து சேர்வதுடன், புதிய வருமான வழிகளும் திறக்கும். குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் ஃபேஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதோடு, குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ரிஷப ராசி
இந்த கேந்திர திருஷ்டி யோகம் தொழில் மற்றும் பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றத்தைத் தரும். உங்கள் தலைமைத்துவத் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டைப் பெறும் என்பதுடன், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்குச் சாதகமான செய்திகள் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
துலாம் ராசி
இந்த யோகக் காலம் புதிய வாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அள்ளிக் கொடுக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான பாதைகள் தடையின்றி அமையும். எதிர்பாராத வகையில் பெரிய தொகை கைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதுடன், புதிய தொழில் முயற்சிகளும் இரட்டிப்பு லாபத்தைத் தரும். மேலும், வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு வலுப்பட்டு குடும்ப உறவு சிறக்கும்.
