LATEST NEWS
“அறிவாலய கழிவறையில் முத்து குளிப்பவர்கள்” திமுகவினரை மிகக் கொடூரமாக சாடிய துரை வைகோ… கூட்டணிக்குள் வெடித்த பயங்கர மோதல்..!!
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தன்னைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும் அவதூறாகவும் சிலர் பேசி வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். அவ்வாறு பேசுபவர்களைச் சாடும் வகையில், “அறிவாலய கழிவறையில் முத்து குளிப்பவர்கள்” என அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், கடந்த காலங்களில் தங்களுக்குள் இருந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மதிமுகவின் அரசியல் இருப்பு மற்றும் தங்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் திமுக தரப்பில் பேசப்படும் கருத்துக்களுக்குத் தனது கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் தந்தி டிவி உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் வெளியாகி, திமுக – மதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
