LATEST NEWS
“சிக்கன், மட்டன் எல்லாம் பழசு… இனி கோப்ரா பக்கோடா தான் ட்ரெண்டு..!” வைரலாகும் இந்தோனேசியாவின் ‘திகில்’ ஸ்ட்ரீட் ஃபுட்..!!
சிக்கன் மற்றும் மட்டன் பிரியர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், நாகப்பாம்பின் இறைச்சியில் செய்யப்பட்ட பக்கோடா, சமோசா மற்றும் சூப் போன்ற உணவுகளை மக்கள் ஆர்வத்துடன் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தோனேசியாவில் இயங்கி வரும் ஒரு விசித்திரமான தெருவோர உணவுக் சந்தையைப் பற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள ஒரு தெருவோர உணவுக் கடையில் படமாக்கப்பட்டதாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அத்னான் முசாஃபிர்’ என்ற பயண விளாகர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அங்குள்ள கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது; நூற்றுக்கணக்கான வைரல் வீடியோ உயிருள்ள நாகப்பாம்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவை யாரையும் கடிக்காமல் இருக்க அவற்றின் வாயில் பாதுகாப்புக்காக டேப் ஒட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தவுடன், அங்கிருக்கும் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாக அந்தப் பாம்புகளைச் சமைத்து வழங்குகின்றனர்.
https://www.instagram.com/reel/DbhykRXjxtu/?utm_source=ig_web_button_share_sheet
அந்த உணவகங்களை நடத்தும் பெண்களின் கூற்றுப்படி, அங்குள்ள உள்ளூர் மக்களிடையே நாகப்பாம்பு இறைச்சிக்கு மிக அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இங்கு பக்கோடா மட்டுமன்றி, கோப்ரா சூப், டிக்கா, சாஸேஜ் மற்றும் சமோசா போன்ற பலவிதமான உணவுகளும் தயார் செய்து விற்கப்படுகின்றன. பாம்புகளைக் கொண்டு உணவு தயாரிக்கும் இந்தத் திகிலூட்டும் வீடியோவைக் கண்டு இணையவாசிகள் அதிர்ச்சியடைந்திருந்தாலும், அங்குள்ள மக்களுக்கு இது அவர்களின் அன்றாட உணவின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது.
