LATEST NEWS
“உங்களோட இந்த குணம் எனக்கு பிடிச்சிருக்கு” ஆதாரத்தைக் காட்டிய சபாநாயகர்… உடனே ஆஃப் ஆன எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி… பேரவையில் நடந்த அந்த பெருந்தன்மையான சம்பவம்..!!
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றது தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. “திமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்குகளை நாங்கள் திரும்பப் பெற்றதே இல்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் திட்டவட்டமாகப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அவையில் பேசிய சபாநாயகர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்களை அவையில் நேரடியாகக் காட்டினார். சபாநாயகர் காட்டிய வலுவான ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று பேரவையில் உடனடியாகத் தெரிவித்தார்.
ஆதாரங்களைச் சபாநாயகர் காட்டியவுடன், தனது தவறை உணர்ந்து தான் பேசிய கருத்தை உடனே திரும்பப் பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையான குணத்தைச் சபாநாயகர் வெகுவாகப் பாராட்டினார். தவறான ஒரு தகவலைத் திருத்திக் கொள்வதில் காட்டிய இந்த நற்பண்பு அவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
