LATEST NEWS
அட சண்டாளங்களா..! தமிழனுக்கு மூளை இருக்கா..? இல்லையா..? எதை வச்சுடா அவரை CM-ஆ தேர்ந்தெடுத்தீங்க..? செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது முன்வைத்துள்ள மிகக் கடுமையான காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், தவெக அரசு அமைந்த விதம் குறித்தும், தமிழக வாக்காளர்களின் தேர்தல் முடிவு குறித்தும் அவசியமான தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தினார்.
மேடையில் மிக ஆக்ரோஷமாக முழங்கிய செல்லூர் ராஜூ, “மக்களிடம் வந்து நேராக ஓட்டே கேட்காத ஒருவருக்குப் போய் ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர வைத்துவிட்டீர்களே.. சண்டாளங்களா! தமிழனுக்கு மூளை இருக்கா..? இல்லையா..?” என்று வாக்காளர்களை நோக்கிக் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “எதை வைத்துடா அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கடுமையான வார்த்தைகளால் தனது ஆதங்கத்தைப் பதிவிட்ட செல்லூர் ராஜூவின் இந்த அதிரடி பேச்சு, தவெக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்பு தொண்டர்களிடையே தற்போதே புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
