LATEST NEWS
“பாட்டி சிரிச்ச அந்த ஒரு நொடி போதும்..!” 8 பேரன்கள் இணைந்து 100 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய பேரதிசயம்.. மனதை நெகிழ வைக்கும் வைரல் வீடியோ..!!
முதுமையால் நடக்கும் அடிகள் தளர்ந்து போகும் வயதில், 100 வயதான பாட்டியின் கனவை அவரது பேரன்மார்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிறைவேற்றியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த 100 வயதான சுனேரி தேவி என்ற முதியவர், இந்தத் தளராத வயதிலும் கன்வார் யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த முழுப் பயணத்தின் போதும், அவரது 7 பேரன்மார்களும் ஒரு கொள்ளுப் பேரனும் பாட்டியைப் பல்லக்கில் அமர்த்தி, தங்களின் தோள்களில் மாறி மாறிச் சுமந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
जिस उम्र में कदम साथ छोड़ देते हैं, उस उम्र में 100 साल की दादी का सपना उनके पोतों के कंधों ने पूरा कर दिया।
उत्तर प्रदेश के सहारनपुर की 100 साल की सुनहेरी देवी ने इस उम्र में भी कांवड़ यात्रा पूरी की। पूरी राह उनके 7 पोतों और 1 नाती ने बारी-बारी से दादी की पालकी अपने कंधों पर… pic.twitter.com/OIzi02UWCc— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 5, 2026
‘போல் பாம்’ முழக்கங்களுடன் தங்கள் அன்புப் பாட்டியைச் சுமந்தபடி அவர்கள் முன்னேறிச் சென்ற காட்சி, குடும்பங்கள் சிதைந்து வரும் இக்காலக்கட்டத்தில் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கலியுகத்திலும் ஷ்ரவன் குமார் போன்ற பக்திமிக்க பேரன்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே சான்றாகும். கனவை நனவாக்கிய அந்தப் பாட்டிக்கும், அவருக்குச் சேவை செய்த அன்புப் பேரன்மார்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
