LATEST NEWS
தம்பி மகளின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய VJ பிரியங்கா…. வெளியான க்யூட் புகைப்படங்கள்…!!!
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.
அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.
அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது.
அப்படிப்பட்ட நேரத்தில் இவருக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருந்துள்ளனர். இவர் எப்போதுமே பல நிகழ்ச்சிகளில் அம்மா மற்றும் தம்பி பற்றி பேசும்போது உடனே அழுது விடுவார். தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பிரியங்கா பணியாற்றி வருகிறார்.
இதனிடையே கடந்த வருடம் பிரியங்காவின் தம்பி ரோஹித்துக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரியங்கா இணையத்தில் பகிர்ந்திருந்தார்.அதேசமயம் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களையும் அவர் பகிர்ந்தார்.
தன்னுடைய தம்பி மகளுக்கு இஹா என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் இதற்கு அழகான பூமி அல்லது உலகம் என்று பொருள் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரியங்காவின் தம்பி மகளின் முதலாமாண்டு பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை பிரியங்கா பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
