LATEST NEWS
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் வெளியாகி புதிய சாதனை படைத்த துல்கர் சல்மானின் திரைப்படம்… மகிழ்ச்சி பொங்க அவரே வெளியிட்ட பதிவு…
மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.
இவர் தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.
இவர் தற்பொழுது மலையாளத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் திறமையான இரட்டையர்களான ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் ஆகியோரின் இசையால் கூடுதல் பலம் பெற்றுள்ளது.
இந்த பீரியட் கேங்ஸ்டர் படம் திறம்பட பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பர பலகைகளை அலங்கரிக்கும் முதல் மாலிவுட் திரைப்படம் என்ற வரலாற்றை உருவாக்கி இருக்கிறது இந்தப் படம். படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.
இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோருடன், செம்பன் வினோத், ஷபீர் (டான்சிங் ரோஸ்), நைலா உஷா, ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, பிரசன்னா, கோகுல் சுரேஷ், அனிகா சுரேந்திரன் மற்றும் சரண் சக்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்பொழுது இத்திரைப்படம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் வெளியானதை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
View this post on Instagram
