LATEST NEWS
பட்டிமன்ற தொகுப்பாளர் ஐ லியோனியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள்…
தமிழகத்தில் பட்டிமன்ற பேச்சாளரின் மிகவும் பிரபலமானவர் திண்டுக்கல் ஐ லியோனி. தன்னுடைய கலகலப்பான பேச்சால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே மிமிக்ரி செய்வது மிகவும் ஆர்வம் கொண்டவர்.
இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “நல்ல பேசுங்க நல்லதையே பேசுங்க” என்ற சமூக விவாத பட்டிமன்றம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்பேச்சாளர்.
1997 ஆம் ஆண்டு வெளியான ‘கங்கா கௌரி’ என்ற திரைப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திண்டுக்கல் ஐ லியோனி. இவர் பட்டிமன்றத் தொகுப்பாளர், சமூக விவாதங்களில் தொகுப்பாளர், பள்ளி ஆசிரியர் , பேச்சாளர் , நடிகர் போன்ற பன்முக திறமையை கொண்டவர்.
இவர் 2010ஆம் ஆண்டு மேடைப் பேச்சாளர்களுக்கான கலைமாமணி விருது தமிழக அரசால் பெற்றார். பேச்சாளர் லியோனி கல்லூரி பேராசிரியரான டாக்டர்.பழனியம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகல்யா என்ற மகளும் உள்ளார். பழனியம்மாள் காலமானார்.
அதன் பிறகு பேச்சாளர் லியோனி அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு சிவ குமார் மற்றும் சதீஷ் குமார் என்ற இரு மகனும் உள்ளார். தற்போது இவரது மகன் சிவக்குமார் ‘அழகிய கண்ணே’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடைபெற்றது. பேச்சாளர் லியோனி நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு ‘ஆலம்பனா’ என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
