தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.

இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.

அந்த சீரியலில் மிகவும் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார்.

சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்தார். இவர் இன்ஸ்டால் பக்கம் மட்டுமல்லாமல் பேஸ்புக் பக்கமும் ரசிகர்களை உருவாக்கி அவரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றார்.

இன்று ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரின் கணவர் இவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை பதிவிட்டார்.

 

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை காண தினேஷ் வராததால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ள ரட்சிதாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவரின் க்யூட்டான புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.