குழந்தையை கைவிட்ட அர்ணவ்.. பிரம்மாண்டமாக குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்திய திவ்யா ஸ்ரீதர்… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

குழந்தையை கைவிட்ட அர்ணவ்.. பிரம்மாண்டமாக குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்திய திவ்யா ஸ்ரீதர்… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவைஇரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரங்களில் அர்ணவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்த பிரச்சனை போலீஸ் விசாரணை வரை சென்றது. அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு சீரியல் பிரபலங்கள் ஆறுதலாக இருந்தே வளகாப்பு நடத்தினர்.

இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது வரை பிறந்த குழந்தையை அர்னாவ் நேரில் சென்று பார்க்கவில்லை.

இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் குழந்தை பெற்றுக் கொண்ட திவ்யா ஸ்ரீதர் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.

அந்த விழாவில் சீரியல் நடிகர் நடிகைகள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை தற்போது திவ்யா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகிய வருகிறது.