VIDEOS
பிரசவ அறைக்கு மேக்கப்புடன் சென்ற சீரியல் நடிகை நக்ஷத்ரா… என்ன காரணம் தெரியுமா?.. வைரலாகும் வீடியோ..!!
பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. அதன் பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் நட்சத்திராவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவ அறைக்கு செல்லும் முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முகத்தில் கிரீம் போட்டுக் கொண்டு உதட்டில் லிப்பாம் போட்டுக் கொண்டு சிசேரியன் டெலிவரிக்கு ஃபுல் மேக்கப் உடன் சென்றுள்ளார். ஆப்ரேஷன் தியேட்டருக்கு போகப் போற மேக்கப் என்ன வேண்டி கிடக்கு என அவரின் தாயார் கேட்ட நிலையில், அதற்கு அப்பாவியாக நட்சத்திரா என் குழந்தை என்னை முதல்முறையாக பார்க்கும் போது நான் அழகாய் இருக்க வேண்டும் என்று சிரித்தபடி கூறியுள்ளார்.