CRIME
சூட்கேஸில் அடைக்கப்பட்ட சடலம்… தப்பியோடிய குற்றவாளிகள்..! மூதாட்டி ஜெயம்மாவைக் குறிவைத்தது யார்…? பின்னணி மர்மம்…!!!
பெங்களூருவின் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜெயம்மா என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 15-ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய பின் காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது மகன் கும்பலகோடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ராமஹள்ளி ஏரியில் மிதந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸைக் கண்ட உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை மீட்டுப் பார்த்தபோது, அதில் ஜெயம்மாவின் சடலம் அழுகிய நிலையில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் காணாமல் போகும்போது அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு மற்றும் மோதிரம் ஆகியவை மாயமாகியிருந்ததால், நகைகளுக்காகவே இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கும்பலகோடு பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயம்மாவை வேறு ஏதேனும் இடத்தில் வைத்து கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக உடலை சூட்கேஸில் அடைத்து ஏரியில் வீசியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காண ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பொலிஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
