LATEST NEWS
இனிமேல் என் பெயரை பயன்படுத்தக் கூடாது…சமந்தா விவாகரத்து ட்ரோல்களுக்கு முடிவு…நாக சைதன்யா வாழ்க்கையை சீரழிக்கும் ‘அந்த’ வீடியோக்கள்… நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு…!
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளிலேயே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டில் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். விவாகரத்திற்குப் பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை அண்மையில் முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். எனினும், சமந்தாவுடன் வாழ்ந்த காலத்திலேயே நாக சைதன்யா அவருக்குத் துரோகம் இழைத்ததாக சமூக வலைதளங்களில் அவர் மீது நீண்ட காலமாகவே கடுமையான விமர்சனங்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தன் மீதான தொடர் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நாக சைதன்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தனது முன்னாள் மனைவி சமந்தா மற்றும் தனது பெயரைப் பயன்படுத்தி யூடியூபில் (YouTube) திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அவதூறான ட்ரோல் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார். மேலும், தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில ஆபாச இணையதளங்களில் வெளியாகி வரும் வீடியோக்களையும் முழுமையாக நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது தனிப்பட்ட நற்பெயர் மற்றும் உரிமைகளைப் (Personality Rights) பாதுகாப்பதற்காக மட்டுமே இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக நாக சைதன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதள நிறுவனங்களான கூகுள் (Google) மற்றும் யூடியூப் ஆகியவை இதில் 8-வது எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற இணையப் பக்கங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது.
