LATEST NEWS
ஹார்முஸ் ஜலசந்தியில் சுக்குநூறான ஈரானின் திட்டம்…! கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா…. இறங்கி அடித்த ட்ரம்ப்…!!
ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் ஈரான் அரசு கொண்டு வந்த பிட்காயின் அடிப்படையிலான கப்பல் காப்பீட்டுத் திட்டத்திற்கு அமெரிக்கா பெரிய முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 9,500 கோடி ரூபாய்) மதிப்புள்ள டிஜிட்டல் கிரிப்டோகரன்சி சொத்துக்களை அமெரிக்க அரசு அதிரடியாகக் கண்டுபிடித்து முடக்கியுள்ளது.
சர்வதேச அளவில் டாலர் மற்றும் இதர பாரம்பரிய நாணயங்கள் மூலம் வர்த்தகம் செய்ய மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளை உடைக்கவே, ஈரான் “ஹார்முஸ் சேஃப்” என்ற கிரிப்டோ காப்பீட்டுத் தளத்தைத் தொடங்கியது. பிட்காயின் போன்ற திறந்தவெளி நாணயங்களை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது என்று ஈரான் போட்ட கணக்கை, அவர்களது டிஜிட்டல் வாலட்டுகளை நேரடியாகப் பறிமுதல் செய்ததன் மூலம் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தவிடு பொடியாக்கியுள்ளன.
அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த அதிரடிப் பறிமுதல் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடுமையான சொத்து முடக்கத்தால் ஈரான் நாடு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தளவிற்கு எனில், அந்நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்குக் கடந்த சில மாதங்களாகச் சம்பளம் கூட வழங்க முடியாத இக்கட்டான சூழல் அங்கு நிலவி வருகிறது.
இதன் நேரடி விளைவாக ஈரானில் உள்நாட்டுப் பணவீக்கம் அசுர வேகத்தில் உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் கட்டுக்கடங்காமல் விண்ணைத் தொட்டுள்ளன. ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் வரை வருமானம் ஈட்ட ஈரான் அரசு திட்டமிட்டிருந்த சூழலில், அமெரிக்காவின் இந்த பொருளாதார வேட்டை அவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
