LATEST NEWS
பெற்றோர்களே எச்சரிக்கை…களைத் தேடி அலைந்த தந்தை…அந்தரங்கப் படங்கள்.. மிரட்டிய முன்னாள் கடைக்காரர்! காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று செய்த விபரீதம்…தலைமறைவான 5 பேர்… மகளிர் காவல் நிலையம் எடுத்த அதிரடி நடவடிக்கை…!
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் துறையினர் 5 பேர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 6-ஆம் தேதி அதிகாலை தனது மகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அச்சிறுமியை வீட்டில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் தனது மகளிடம் தந்தை விசாரித்தபோது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சிறுமியின் வீட்டிற்கு அருகில் முன்பு மளிகைக் கடை நடத்தி வந்த ஷௌகீன் என்ற நபர், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தவறான வழியில் பெற்றுள்ளார். அவற்றை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அச்சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், ஜூன் 5-ஆம் தேதி அன்று ஷௌகீன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து அச்சிறுமியை வலுக்கட்டாயமாக ஒரு காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி தனது புகாரில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட தொடர்புடைய குற்றப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் 18 வயது நிறைவடையாத சிறார் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும், அவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
