LATEST NEWS
தேர்தலுக்கு முன்பு கடற்கரையில் நடந்த போராட்டம்…விசாரணைக்கு அழைத்த போலீஸ்… ‘வெள்ளிக்கிழமை மாலை 4 மணி’ பின்னணியில் இருக்கும் ரகசிய சதி என்ன?…சர்ச்சைகளின் நாயகி ஜூலியின் வாழ்க்கையில் அடுத்த அதிரடித் திருப்பம்…!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றால் மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காவல்துறை தரப்பிலிருந்து தன்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் தொல்லைகளுக்கு எதிராக, கடந்த தேர்தலுக்கு முன்பு கடற்கரையில் போஸ்டர் ஏந்திப் போராட்டம் நடத்தியதற்காகவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஜூலி, “முன்னதாக நான் கொடுத்த அவதூறு புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது என் மீதே வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு அழைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜூலி முன்வைத்துள்ள மற்றொரு குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தன்னை விசாரணைக்கு அழைத்திருப்பது திட்டமிட்ட ஒரு சதி என்று சந்தேகம் கிளப்பியுள்ள அவர், அடுத்த இரண்டு நாட்கள் நீதிமன்ற விடுமுறை என்பதால், ஒருவேளை தன்னை கைது செய்தால் உடனடியாக ஜாமீன் எடுக்க முடியாத சூழலை உருவாக்கவே இந்தத் குறிப்பிட்ட நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் அலிஷா என்பவர் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது கொடுத்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அவர்களின் மீதே வழக்கு பாயும் அவலநிலை உள்ளதாகக் கூறி, “பெண்களே கவனமாக இருங்கள்” என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ், சமூக ஆர்வலர், யூடியூப் பேச்சாளர் எனப் பல முகங்களைக் கொண்ட ஜூலி, கடந்த சில மாதங்களாகத் தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ஜூலிக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான வாக்குவாதங்கள் நிலவி வந்த சூழலில், தற்போது இந்த போலீஸ் விசாரணை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. உண்மையில் ஜூலி மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது, இதற்குப் போலீஸ் தரப்பு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்ற கேள்விகளுடன், அரசியல் மற்றும் சமூக வலைத்தள வட்டாரங்களில் இந்த விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
