LATEST NEWS
இப்படியும் நடக்குமா.? “அப்பாடா வேலை கிடைச்சதுன்னு நினைச்சேன், ஆனா…” வேலையில் சேர்ந்த 2 மணி நேரத்தில் டிஸ்மிஸ்… இணையவாசிகளை கொந்தளிக்க வைத்த சம்பவம்..!!
ஒரு புதிய வேலைக்குத் தேர்வாகி, மிகுந்த மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் பணியில் சேர்ந்த ஒரு ஊழியர், வேலை தொடங்கி வெறும் இரண்டு மணி நேரத்திலேயே மேலாளரால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தை ஒன்றில் பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஊழியர், தமக்குக் கொடுக்கப்பட்ட தேதியில் முன்கூட்டியே வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய மூத்த ஊழியர், இவரைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்துள்ளார்.
அறிமுகம் சற்று சுமுகமாக இல்லாவிட்டாலும், அந்தப் புதிய ஊழியர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துள்ளார். எனினும், வேலை தொடங்கி இரண்டு மணி நேரமே ஆன நிலையில், பயிற்சி அளித்துக் கொண்டிருந்த நபருக்கு மேலாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஊழியரின் வேலை தொடங்கும் தேதி (Start Date) தவறானது என்றும், மேலாளர் தனது மனதில் நினைத்திருந்த தேதியில் இந்த ஊழியர் வேலைக்கு வராததால், அந்த வேலை வாய்ப்பு வேறொருவருக்கு வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறி, புதிய ஊழியரை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியரின் தரப்பில், மேலாளர் தனது சுயவிவரக் குறிப்பின் (Resume) மேல் பகுதியிலேயே வேலை தொடங்கும் தேதியை எழுதிக் கொடுத்ததாகவும், பின்னர் அதனை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தன் மீது எந்தத் தவறும் இல்லாதபோதும், முதல் நாள் வேலையின் முழு நேரத்தைக் கூட நிறைவு செய்ய முடியாமல் அவமானத்துடன் வீட்டிற்குத் திரும்பியதாகவும், மீண்டும் வேலை தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் ரெடிட் ( தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலர், அந்த ஊழியருக்கு ஆதரவாகவும், எதிர்காலத்தில் வேலைக்கான ஆவணங்களைச் சரியாகச் சேமித்து வைக்குமாறும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
