“டைனோசரே அழிஞ்சு போனப்ப… சில பறவைங்க மட்டும் எப்படிப்பா தப்பிச்சது..?” ‘பாசில் மலம்’ மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச சீக்ரெட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டைனோசரே அழிஞ்சு போனப்ப… சில பறவைங்க மட்டும் எப்படிப்பா தப்பிச்சது..?” ‘பாசில் மலம்’ மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச சீக்ரெட்..!!

Published

on

சுமார் 66 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல் விபத்தில் சிக்கி, ஒட்டுமொத்த டைனோசர் இனமே அழிந்தபோது, சில பறவை இனங்கள் மட்டும் எப்படி உயிர் பிழைத்தன என்பது இன்றுவரை ஒரு பெரும் மர்மமாகவே நீடிக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாசிலாக மாறிய விலங்கின் மலத்திற்குள் (Coprolite) சிக்கியிருந்த சிறிய இறகுகள் மற்றும் எலும்புகள், இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளன. ‘கரண்ட் பயாலஜி’ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, இந்த பாசில் கழிவானது ‘டைரனோசரஸ் ரெக்ஸ்’ போன்ற ஒரு மாமிச உண்ணி டைனோசரால் வேட்டையாடப்பட்ட ‘ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்’ என்ற பழங்காலப் பறவையினுடையது என்றும், அது நீரில் மூழ்கி நீந்தக்கூடிய பறக்க முடியாத பறவை என்பதும் தெரியவந்துள்ளது.

டைனோசர் காலத்தில் வாழ்ந்த பல பறவை இனங்களில், ‘நியோர்னிதிஸ்’ என்ற ஒரே ஒரு நவீன பறவைக் குடும்பத்தின் வழித்தோன்றல்கள் மட்டுமே உயிர் பிழைத்து இன்றைய பறவைகளாக மாறியுள்ளன. விண்கல் விபத்தில் அழிந்துபோன ‘ஹெஸ்பெரோர்னிதிஃபார்ம்ஸ்’ மற்றும் தப்பிப்பிழைத்த ‘நியோர்னிதிஸ்’ ஆகிய இரு இனங்களுமே நீர்நிலைகளில் தான் வாழ்ந்தன என்பதால், ஒன்று மட்டும் அழியக் காரணம் என்ன என்ற கேள்வி நீண்ட காலமாக நிலவி வந்தது. 2016-ஆம் ஆண்டு டேவிட் டிமார் ஜூனியர் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட இந்த பாசில் மலத்தை விஞ்ஞானிகள் மைக்ரோ-சிடி ஸ்கேனர் மூலம் பரிசோதித்தபோது, அதில் அந்த பறவையின் காலெலும்புகள், இறகுகள் மற்றும் அது கடைசியாக சாப்பிட்ட ‘கார்’ என்ற மீனின் வைர வடிவ செதில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

சிகாகோவின் ஃபீல்டு மியூசியத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஜிங்மாய் ஓ’கானர் கூறுகையில், இந்த பாசிலில் இருந்த சில இறகுகள் மிகவும் சிறியதாகவும், பஞ்சு போன்றும் இருந்ததால், அவை உடலை வெப்பமாக வைத்திருக்க போதுமானதாக இருந்திருக்காது என்று தெரிவித்துள்ளார். விண்கல் மோதிய பிறகு பூமியின் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குளிர்ந்த போது, பழங்காலப் பறவைகளின் இந்த பலவீனமான இறகுகளே அவற்றின் அழிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும், மாறாக தப்பிப் பிழைத்த ‘நியோர்னிதிஸ்’ பறவைகளின் இறகுகள் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு மேம்பட்டதாக இருந்ததே அவை உயிர் பிழைக்கக் காரணம் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in