LATEST NEWS
“இந்த வாழ்க்கையை விடவே மாட்டேன்” இந்தியக் குடும்ப மருமகளான இத்தாலி பெண்.. ஷாக் கொடுத்த 3 விஷயங்கள்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?
ஒரு இத்தாலிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கிரிஸ்ஸா வர்கீஸ் என்ற பெண், இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த பிறகு, தனது அன்றாட வாழ்க்கையில் சந்தித்த மூன்று ஆச்சரியமான விஷயங்களை இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். இத்தாலியக் குடும்பங்களிலும் பெரிய உணவு விருந்துகளும், சுறுசுறுப்பான மனிதர்களும் இருப்பது வழக்கம் என்பதால், இந்திய கலாச்சாரத்திலும் உணவு மற்றும் கொண்டாட்டங்கள் இருக்கும் என்பதை அவர் ஏற்கனவே எதிர்பார்த்துள்ளார். ஆனால், இங்குள்ள சில எளிய தினசரி பழக்கவழக்கங்கள் அவரை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அவர் முதலாவதாகக் குறிப்பிட்ட விஷயம், இந்தியக் குடும்பங்களின் அசாத்தியமான விருந்தோம்பல் ஆகும். இந்தியர்கள் யாரையும் பசியோடு இருக்க விடுவதில்லை என்றும், தட்டில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடித்த உடனே, வயிறு நிறைந்துவிட்டது என்று கூறினாலும் கூட, அதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து மூன்று முறை உணவை வற்புறுத்திப் பரிமாறுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். “எனக்கு வயிறு நிறைந்துவிட்டது” என்ற வார்த்தை இங்குள்ளவர்களிடம் வேலை செய்வதில்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார். இரண்டாவதாக, சமையலறையில் உதவி செய்வதைப் பற்றிப் பேசிய அவர், இத்தாலியக் குடும்பங்களில் விருந்தினர்கள் வந்தால் அனைவரும் சேர்ந்து சமைப்பார்கள், ஆனால் இந்தியக் குடும்பங்களில் விருந்தினர்களை சமையலறைக்குள் சேர்க்காமல், அவர்களை அமர வைத்து உபசரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று வியப்புடன் தெரிவித்துள்ளார்.
மூன்றாவதாக, இந்தியர்கள் மனதில் பட்டதை நேடியாகவும் வெளிப்படையாகவும் பேசும் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்துள்ளார். “உன் புருவங்களை இன்னும் அழகாகச் செய்திருக்கலாம்”, “உன்னுடைய லெஹங்கா உடைக்கு இந்த நகைகள் பொருத்தமாக இல்லை” என்பது போன்ற கருத்துக்களை முகத்திற்கு நேராகவே பேசிவிடுகிறார்கள். ஆரம்பத்தில் இது சண்டை போடுவது போலத் தோன்றினாலும், பின்னர் இது அவர்களின் இயல்பான உரையாடல் முறை என்பதைத் தான் புரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார். இந்த மாறுபட்ட குடும்ப கலாச்சாரத்திற்குள் நுழைந்ததில் இருந்து தான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகவும், இதற்காகத் தனது கணவரையோ அல்லது இந்த வாழ்க்கையையோ எதற்கும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
